Sunday, February 18, 2024

தீரதம் நூலுக்கான முன்னுரை -கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ்

 

தீரதம்  நூலுக்கான  முன்னுரை -கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ்

 


சமூகங்களின் அடையாளத்தை வெளிப்படுத்துவதில் இலக்கியங்களுக்கு முக்கிய பங்குண்டு. ஈழத்தில் தமிழ் பேசும் இரு சமூகமானதமிழர்களும் முஸ்லிம்களும் தமதுஅடையாளத்தைவெளிப்படுத்துவதற்கு இலக்கியத்தைமுக்கியசாதனமாகப் பயன்படுத்திஉள்ளனர். ‘மரணத்துள் வாழ்வோம்’ என்றகவிதைத் தொகுதி ஈழத்துத் தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்தமானபோராட்டவலியைவெளிப்படுத்துவதாகஅமைந்தது. இதேபோன்று‘மீசான் கட்டைகளில் மீளஎழும் பாடல்கள்’ என்றதொகுதி போராட்டத்தின் உக்கிரத்திற்குள் நசுங்குண்ட முஸ்லிம்களின் வலியைவெளிப்படுத்தியது. அதேநேரம்தொகுதிகளாகவெளிவராவிடினும் 1980களுக்குப் பின்னர் ஈழத்தில் வெளிவந்தபெரும்பாலானசிறுகதைகள் அவ்வச்சமூகஅடையாளத்தைவெளிப்படுத்துவதில் பெரும் பங்குவகித்தன.

 1950களில் அ.ஸ.கிழக்கிலிருந்து சிறுகதைஎழுத முனைந்தபொழுது வேறொருவிதமான நெருக்கடியைச் சந்தித்தார். தமிழகசஞ்சிகைகளுக்குஅவர் எழுதியசிறுகதைகளில் இருந்த இங்குள்ளஊர்ப்பெயர்களும் ஆட்பெயர்களும் திருத்தப்பட்டுத் தமிழகப் பாணியிலே வெளிவந்தது. ஈழத்துச் சுதேசஉணர்வுகளுடன் எழுதப்பட்ட அவரது கதைகள் செங்கல்பட்டுவாகவும் ஆபீசாகவும் தலைமைக்குமாஸ்தாவாகவும் திருநெல்வேலிச் சந்தியாகவும் மாற்றப்பட்டவரலாறுஉண்டு.

  அதுபோக ஷரிஆ சம்பந்தப்பட்டபிரச்சினைகளைக் கதைக் கருவாகக் கொண்டுஅவர் சிலகதைகளைஎழுதியவரலாறும் உண்டு. இந்தத் தொடர்ச்சிபோக 1980களில்தான் தமதுசொந்தசமூகஅடையாளங்களை இயல்பாகவும் வேண்டுமென்றும் தமதுகதைகளுக்குள் கொண்டுவரநமதுஎழுத்தாளர்கள் முனைந்தனர்.

 இந்தவரிசையில் சாய்ந்தமருதைச் சேர்ந்த தீரன் ஆர்.எம். நௌஸாத் ‘வல்லமைதாராயோää‘வெள்ளிவிரல்’ என்ற இரு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டவர். இவரது பிந்திய சிறுகதைத்தொகுதியில் இனப்பிரச்சினை தொடர்பான பல்வேறுகதைகள் வெளிவந்தபோதும் முஸ்லிம் சமூகம் சார்ந்த சிலகதைகளும் வெளிவந்தன. அதேபோன்று இத் தீரதம் என்ற தொகுதியில் வெளிவந்தகதைகளும் இனப்பிரச்சினை சார்ந்ததும் சமூக அடையாளங்களை வெளிப்படுத்தும் கதைகளாகவும்அமைந்துள்ளன.

 அதேநேரம் ‘நட்டுமைää’ ‘கொல்வதெழுதுதல் 90’ ஆகிய இரண்டு நாவல்களையும் தீரன் எழுதியுள்ளார். கிழக்கில் நாவல் துறையின் வளர்ச்சி மிகவுமே போதுமானதல்ல. அவ்வாறு இருப்பினும் இவ்விரு நாவல்களையும் முக்கியமான நாவல்களாகக் கொள்கிறபோதும் இதனுள் உள்விழுந்து பார்க்கிறபோது விமர்சனரீதியாகச் சிலகேள்விகளை எழுப்பவேண்டிய தேவையிருக்கிறது. அதேபோன்று தீரதம் என்ற இத்தொகுதியில் வெளிவந்தசிறுகதைகள் சிலவற்றைப் பற்றியும் சிலகேள்விகள் எழுப்பவேண்டியிருக்கிறது. ஒட்டுமொத்தமாகக் கிழக்கு முஸ்லிம் சமூகத்தின் அனுபவங்கள் இந்தக் கதைகளில் பதிவாகியிருப்பதுகுறிப்பிடத்தக்கது.

 ஒய்த்தாமாமா’ää‘பொன்னெழுத்துப் பீங்கான்ää தீரதம். முதலானகதைகள் முஸ்லிம் சமூகம் சார்ந்த மிகமுக்கியமான கதைகள். இப்போதைய சிறுவர்களுக்கு ஒய்த்தாமாமா பற்றிய அனுபவம் இருப்பதில்லை. ஒய்த்தாமாமாவின் வேலைகள் எல்லாவற்றையும் வைத்தியர்கள் பாரமெடுத்துக்கொண்டார்கள். முஸ்லிம்களிடம் சாதிஉண்டா என்று கேட்பவர்களுக்கு ஒய்த்தாமாமா ஓர் ஆதாரமாக அமையக்கூடும். ஆனால்ääஅந்தச் சமூகக் கட்டுமானத்தைப் பற்றி தீரன் சொல்லவரவில்லை என்று நினைக்கிறேன். அதேநேரம ;ஒய்த்தாமாமாவைப் பற்றிய ஒரு பதிவினை தீரன் மிகஅற்புதமாகக் கொண்டுவந்திருக்கிறார்.

பொன்னெழுத்துப் பீங்கான்’ லண்டனுக்குச் சென்ற தன் மகளின் செய்தியை அறியவிரும்பும் தாயின் ஏக்கத்தைவெளிப்படுத்துகின்ற ஒரு நல்லகதை. அவள் பக்கத்தில் ஒரு வெள்ளைக்காரனோடு நின்று எடுக்கப்பட்டஒரு புகைப்படப் படத்தைக் கண்டவுடன் அந்தத் தாய்க்கு ஏற்பட்ட மனஉணர்வு மிகஅற்புதமாக இந்தக் கதையில் வருகிறது. புலிகளினால் கொலைசெய்யப்பட்டதன் கணவர் ஒரே பீங்கானிலே–பொன்னெழுத்துப் பீங்கானிலே சாப்பிட்ட கதையை அந்தத் தாய் இக்கதையில் விபரிக்கிறாள்.
அப்படிப்பட்டஎனக்கிப் பொறந்தஒனக்கிட்டயும் அந்தப் பொன்னெழுத்துப் பீங்கான்தான் இரிக்கிம்..அதுலநீஆரையும் சாப்பிடஉடமாட்டாய் ண்டும் எனக்கித் தெரியிம்..ண்டாலும் புள்ளே..எண்டமனம் கெடந்துஅல்லாடுது.. ஒடன இந்த கெசட்டுப் பீசக் கேட்டஒடனே… நாட்டுக்குப் பறந்துவாடா என்டகண்டுமகளாரே! நீ வெராட்டி என்ட மய்யத்துலதான் முளிப்பாய்.. செல்லிட்டன்.. வல்லபெரியநாயன் ஒனக்கு ஒதவி செய்யட்டும்.. ஆமின்… ம்க்க்க்க்..ம்ம்ம்.
கிராமிய உணர்வு ததும்பும் இக்கதையில் பொன்னெழுத்துப் பீங்கான் இங்கு ஒரு குறியீடாக வருவதாகவே நான் உணர்கிறேன். இக்கதையிலும் முஸ்லிம் உணர்வு சார்ந்த வியாக்கியானம் ஆங்காங்கே வருகிறது.

தீரதம் என்பது இறைகாதலை வெளிப்படுத்துகிற மிகமுக்கியமான ஒருகதை. சூபி இசம் சார்ந்த இக்கதை பழைய மெய்ஞ்ஞான பாடல்களின் இன்னுமொரு வியாக்கியானமாக உரைநடையில் வந்த ஒன்றாகவேநான் நோக்குகிறேன். புதுமைப்பித்தன் முதலான பலசிறுகதை ஆசிரியர்களும் இந்தத் தத்துவார்த்தரீதியான ஆன்மீகம் சார்ந்த கதைகளை எழுதியிருக்கிறார்கள். அவ்வகையில் முஸ்லிம்கள் சார்ந்த ஆன்மீகரீதியான உணர்வினை வெளிப்படுத்துகிற மிகஎளிய ஒருகதையாகவே தீரதம் கதையைக் கொள்ளலாம்.

கிராமிய அனுபவங்களைக் கூறுகிற அதுவும் கிழக்குப் பிரதேச கிராம அனுபவங்களைக் கூறுகிற ஒரு நல்லகதை ‘மறிக்கிடா. ஆனால்ää இக்கதையைப் பொறுத்தவரையில் மாற்று இனப் பாத்திரங்கள் கதையாகி இருப்பது நமது இன உறவுக்கு அப்பாலே முரண்படத்தக்க கேள்விகளையும் எழுப்பக்கூடும். இப்படியான கதை சொல்லுகிறபாங்கு ஈழத்துச் சிறுகதை மரபிலே உண்டு. மிகக் கவனமாக இந்தமாற்று இனப் பாத்திரங்களைக் கையாள்வதில் ஆசிரியர்கள் மிகப் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தேவையிருப்பதாகவும் நான் உணர்கிறேன்.

அணில்’ இன ரீதியான விவகாரங்களை வெளிப்படுத்துகிற ஒருமுக்கியமான நல்லகதை. இதேபோன்று புதியஉத்தியில் அமைந்த இன விவகாரங்களைக் கையாள்கிற மற்றுமொருகதை ‘காக்காமாரும் தேரர்களும்’ இக்கதை வெறும் செய்திகளைத் தொகுத்துச் சொல்வதாக இருந்தாலும் ää
இதெல்லாம் ஒருசிறுகதையா?’ என்று முகத்தில் வீசினார் பத்திரிகைஆசிரியர். இதெல்லாம் சிறுகதையல்ல.. பெரும்பெரும் கதைகள்.. என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன். –
இக்கதையிலுள்ள‘பெரும்பெரும் கதைகள்’ என்றசொல்லின் மூலமே இச்சிறுகதையின் முழு அர்த்தத்தையும் ஆசிரியர் வெளிக்கொண்டுவருகிறார். இவ்வகையான கதைகளை தீரன் முன்னரும் எழுதியுள்ளார்.

 ‘மும்மான்’ என்றகதையும் இன ரீதியான விவகாரங்களை வெளிப்படுத்துகிற நல்லகதை.

இலக்கியக்காரர் ஒவ்வொருவருக்கும் அவரவர் வீட்டிலே இருக்கிற பிரச்சினைகளை ஒரு அற்புதமான உத்தியோடு அணுகியிருக்கிற ‘கபடப்பறவைகள்’ என்ற கதை சுவாரசியமானதுதான்.

மேலும்சில கதைகளோடு அமைந்த இந்த தீரதம். என்ற தொகுதி ஒருநல்ல சிறுகதை ஆசிரியன் ஆர்.எம். நௌஸாத் என்பதற்கு மிகப் பெரும் சான்றாகும். நல்ல படைப்புக்களை வாசிக்கின்றபோது இன்னும் இன்னும் செழுமைபெற்ற நல்லகதைகள் வந்துசேரும். அதுமாத்திரமன்றி இந்தக் கதைகளைச் செப்பனிடச் செப்பனிட இன்னும் நல்லகதைகள் வந்துசேரும். நௌஸாத்தின் கதைகள் புதியஅனுபவங்களைத் தருகிற நல்லகதைகள் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை. தீரதம் ஆசிரியருக்கு நமது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் என்றும் உண்டு.

கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ்

தலைவர்.. மொழித்துறை
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
ஒலுவில்- சிறிலங்கா.
2016.11.10

 

No comments:

Post a Comment